Spread the love

துப்பாக்கி முனை படத்தின் இயக்குனரும் மணிரத்னத்தின் உதவியாளருமான தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடிகை ஆண்ட்ரியா கடல் கன்னியாக நடிக்கிறார். இதன் மூலம் முழு நீள கடல் கன்னி வேடத்தில் நடிக்கும் முதல் இந்திய நடிகை ஆண்ட்ரியா ஆகும். இந்த படம் போக்கஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவர இருக்கிறது.

.இந்த படத்திற்காக சென்னை தி.நகரில் ரூ.50 லட்சம் மதிப்பில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதையடுத்து திருச்செந்தூர் மணப்பாடு என்கிற இடத்தில் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் முடிவடையும். 2022 கோடையில் படம் வெளியாக உள்ளது. படத்தில் அதிகளவில் அனிமேஷன் காட்சிகள் இடம்பெற உள்ளன.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *