Spread the love

ஒருவர் கனவில் தான் மலம் கழிப்பதாக கனவு கண்டால் அவர் கவலைகளிலிருந்து விடுபடுவதையும், அவர் அனுபவிக்கும் அழுத்தங்கள் மற்றும் பிரச்சனைகளிலிருந்து விடுபடுபடப் போகிறார் என்பது பொருள்.

நீங்கள் முன்பு அறிந்திரராத செல்வந்தர் ஒருவர் மலம் கழிப்பதாக கனவு கண்டால் நீங்கள் பல தான தர்மங்கள் செய்யப்போகிறீர்கள்.

ஒரு கனவில் ஒரு திறந்தவெளியில் அதிக அளவு மலத்தைப் பார்ப்பது இலக்குகளை அடைவதில் தாமதம் மற்றும் தடையைக் குறிக்கிறது.

நீங்கள் உங்களுக்கு தெரிந்த ஓரு பகுதியில் மலம் கழிப்பது என்பது தனிப்பட்ட ஆசைகளுக்கேற்ப குறிப்பிட்ட தேவைக்காக பணத்தை செலவழிப்பதைக் குறிக்கிறது, அதே நேரத்தில் நீங்கள் உங்களுக்கு தெரியாத இடத்தில் மலம் கழிப்பது சட்டவிரோத அல்லது அறியப்படாத விஷயங்களில் பணத்தை வீணாக்குவதைக் குறிக்கிறது.

ஒருவர் கனவில் மலத்தை மண் அல்லது குப்பை அள்ளிப் போட்டு மறைப்பது அவர் பணத்தை பதுக்குவதன் அறிகுறி அல்லது அவரது கஞ்சத்தனத்தைக் குறிக்கிறது. நீங்கள் திறந்தவெளி அல்லது கடற்கரையில் மலம் கழிப்பது அவருக்கு வரவிருக்கும் நல்ல நிகழ்வைக் குறிக்கிறது.

கனவுகளில் மலத்தின் விரும்பத்தகாத வாசனை துன்பத்தைத் தரும். மேலும் தங்களிடம் உள்ள பணத்தை எப்படி சம்பாதித்தீர்கள் என்ற கேள்விக்கு ஆளாகி கெட்ட பெயரைத் தரும்.

மலம் உங்கள் துணிகள் மேல் படுவது இழப்பின் அறிகுறியாகும். மேலும் மலம் கழிப்பதில் சிரமம் வெற்றிக்கான பாதையில் தடைகள் அல்லது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை குறிக்கிறது.

மேலும் பல்வேறு கனவுகளின் பலன்கள் அறிய இங்கே கொடுக்கவும்.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *