Spread the love

உள்ளம் பெருங்கோயில் 
ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே.

பொருள்

நமது உடம்பே ஆலயம். நமது உள்ளம் கடவுள் இருக்கும் கருவறை (கோயில் என்பது கருவறை எனப் பொருள் கொள்ளப்படும்). உலக உயிர்களுக்கு அருளை வாரி வழங்கும் வள்ளலாகிய பரம்பொருளை சென்று வழிபடும் வெளி வாசலான கோபுர வாசலாக விளங்குவது நம் வாய். அறியாமை இருள் அகன்ற தெளிவான மனநிலை வாய்க்கப்பட்டவர்களுக்கு, உயிரே வழிபட்டு வணங்கத்தக்க சிவலிங்கம். இவ்வாறு அறிந்து வழிபடுபவர்களுக்கு, கண், மூக்கு, வாய், செவி, உடம்பு ஆகிய அழிவைத் தருகிற வஞ்சகமான ஐம்புலன்களும் கோயிலின் பெரிய, ஒளி வீசுகிற, விளக்குளாகத் திகழும் என்பது பாடலின் பொருள்.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *