Spread the love

சேலத்தில் மசாஜ் சென்டர் நடத்தி வந்த பெண் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அடுத்த குமாரசாமிபட்டியை சேர்ந்தவர் நடேசன். முன்னாள் கவுன்சிலரான இவர் அப்பகுதியில் வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு வருகிறார். இவரது வீட்டின் இரண்டாவது மாடியில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த முகமது சதாம், அவரது மனைவி தேஜஸ் மோண்டல் இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இந்த தம்பதியினர் சேலம் அழகாபுரம், பள்ளப்பட்டி மற்றும் அஸ்தம்பட்டி ஆகிய இடங்களில் மசாஜ் சென்டர் நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

அதனால் கணவன், மனைவி ஒரு வீட்டிலும், மசாஜ் சென்டரில் வேலை பார்த்த இளம்பெண்கள் மற்றொரு வீட்டிலும் தங்கி வந்துள்ளனர். கடந்த 10 நாட்களாக அந்த இளம்பெண்கள் தேஜஸ் மோண்டல் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே 4 நாட்களுக்கு முன்பு கணவர் முகமது சதாம் வேலை விஷயமாக சென்னை சென்றுள்ளார்.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *