Spread the love

ஆமணக்கு யானை ஒப்பீடு

முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரும்கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் – ஏத்திசைக்கும் தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில் ஆமணக்கு மால்யானை யாம்.

வைக்கோல்- யானை

வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்றசெக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்வைக்கோலும் மால்யானை யாம்.

பாம்பு – வாழைப்பழம்

நஞ்சிருக்குந் தோலுரிக்கு நாதர்முடி மேலிருக்கும்வெஞ்சினத்திற் பற்பட்டான் மீளாது – விஞ்சுமலர்த்தேம்பாயுஞ் சோலைத் திருமலைரா யன்வரையில் பாம்பாகும் வாழைப் பழம்.

பாம்பு- எள்

ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டைபற்றின் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்உற்றிடுபாம் பெள்ளெனவே யோது .

பாம்பு – எலுமிச்சம்பழம்

பெரியவிட மேசேரும் பித்தர் முடியேறும்அரியுண்ணும் உப்பு மேலாடும் – எரிகுணமாம்தம்பொழியுஞ் சோலைத் திருமலைரா யன்பரையில் பாம்பும் எலுமிச்சம் பழம்

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *