Spread the love

ஐபிஎல் 2021- 2வது சுற்றில் கொல்கத்தா அணி பெரிய அளவில் எழுச்சி பெற்றுள்ளது, இரண்டு பெரிய அணிகளான ஆர்சிபியை அன்று ஊதியதோடு கடந்த ஐபிஎல் சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியையும் நேற்று அடித்து நொறுக்கியது கொல்கத்தா நைட் ரைடட்ஸ்.

கொல்கத்தா அதிரடிக்குமுன் ஒன்றும் செய்ய முடியாமல் மும்பை சரணடைந்தது குறித்து கொல்கத்தா கேப்டன் மோர்கன் கூறும்போது, “நாங்கள் இப்படி விளையாடி நீண்ட காலம் ஆகிறது. 2 சீசன்களாக பிரெண்டன் மெக்கல்லம் அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார். மும்பை போன்ற வலுவான அணியை கட்டுப்படுத்தி பிறகு இலக்கை இப்படி ஆக்ரோஷமாக விரட்டியது பெரிய தன்னம்பிக்கையை அளிக்கிறது.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *