Spread the love

அரியது

அரியது கேட்கின் வரிவடி வேலோய் அரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செயல் அரிது தானமும் தவமும் தான்செய்வ ராயின் வானவர் நாடு வழிதிறந் திடுமே.

பெரியது

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய் பெரிது பெரிது புவனம் பெரிது புவனமோ நான்முகன் படைப்பு நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன் கரிய மாலோ அலைகடல் துயின்றோன் அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம் கலசமோ புவியிற் சிறுமண்புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம் உமையோ இறைவர் பாகத் தொடுக்கம் இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம் பா தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.

இனியது

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்இனிது இனிது ஏகாந்தம் இனிதுஅதனினும் இனிது ஆதியைத் தொழுதல்அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்அதனினும் இனிது அறிவுள் ளாரைக்கனவிலும் நனவிலும் காண்பது தானே.

கொடியது

கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய் அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர் அதனினும் கொடிது இன்புற அவர்கையில் உண்பது தானே. 

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *