Spread the love

பார் சிறுத்ததால், படை பெருத்ததோ…
படை பெருத்ததால், பார் சிறுத்ததோ…
நேர்செறுத்த நெஞ்சினர்க்கு அரிது நிற்பிடம்…
நெடு விசும்பலால் இடமுமிலையே…!

(#கலிங்கத்துபரணி – #செயங்கொண்டார்)

பொருள்

பார்: உலகம்

சிறுத்ததால்: சிறியதானதால்

படை: போர்ப்படை

பெருத்ததோ: பெரியதானதோ!

நேர்: நேரே

செறுத்த: எதிர்த்த

நெஞ்சினர்க்கு: நெஞ்சை உடைய வீரர்களுக்கு

அரிது: கடினம், இல்லை

நிற்பிடம்: நிற்கும் இடம்

நெடு: நீண்ட

விசும்பு: வானம்

அலால்: இல்லாமல்

இடமும்: வேறு இடம்

இலையே: இல்லையே!

விளக்கம்

*கலிங்கப் போரில் பங்கேற்ற வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அவர்கள் நிற்கும் இப்புவி சிறியது போல தோன்றுகிறதோ! இல்லை, இப்புவி சிறியதாய் இருப்பதால் போர் வீரர்களின் எண்ணிக்கை அதிகமானதாக தோன்றுகிறதோ!!!

*இப்போரில், நேருக்கு நேர் நெஞ்சினை எதிர்த்து போரிடும் வீரர்களுக்கு நிற்பதற்கு இப்போர்களம் போதுமானதாக இல்லை… அவர்கள் நின்று போரிட வேண்டுமானால் நீண்ட ஆகாயத்தை தவிர வேறு இடம் ஏதும் இல்லையே.!.!.!

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *