Spread the love

பண்டியனையும் அவன் மதுரை நாட்டையும் மண் புழுதியாக்க வரம்,

மாடர் குல நம்பிமார்களையும் அவர்கள் வம்சத்தையும் அழிக்க வரம், 

மாரி பூசை வாங்க வரம், ஏழு மலை காணியிலும் இருந்து பூசை வாங்க வரம், 

மயிலேறி கணியானிடம் வாய்த்த பூசை வாங்க வரம், 

ஏரி குளம் எங்கும் ஏற்ற உளியேறிய வரம்,

வாதைகள் அருகில் வரவே அச்சம் கொள்ள வரம், 

காலிபோர் வண்ணானிடம் கணத்த பூசை வாங்க வரம், 


கொல்ல வரம்,

வெல்ல வரம்,


கொடுக்கும் வரம், 


அழிக்கும் வரம், 


நோய் தீர்க்கும் வரம்,

 
தீராத வினைகள் எல்லாம் தீர்க்கும் வரம், 


மாறாதநோயெல்லாம் மாயத்தால் மாற்ற வரம், 


தீராத நோயெல்லாம் திருநீற்றால் தீர்க்க வரம், 


ஆக்க வரம்,


ஆனை பந்தம் கொழுத்த வரம், 


அலுக்கு தடி எடுக்க வரம்,


குதிரைபந்தம் கொத்தவரம், 


குலுக்கிவிளையாட வரம்,


ஆனைபோல் அலற வரம், 


அங்குஇங்கும் ஓட வரம்,


பூனைப் போல பதுங்க வரம்,


புலி பாய்சல் பாய வரம், 


சூனியம் மாற்ற வரம்,


நினைத்தவுருவம் எடுக்க வரம்,

இப்படியாக அறுபது வகையான வரங்களை கேட்டு இத்தனை வரங்களும் உடனே வேண்டும் ஆண்டவனை என கேட்க அனைத்தையும் கொடுத்தார் சிவப் பெருமான் அதன் பின்னர்.

 
நாலுமாத சூலிகளை நகத்தால் கிள்ள வரம்,

ஐந்து மாத சூலிகளை கண்டால் அம்மாணை போட வரம், 
எட்டு மாத சூலிகளை கண்டால் இல்லாமல் ஆக்க வரம், 

பத்து மாத சூலிகளை கண்டால் பால்வடிய கொல்ல வரம், 

இத்தனை வரங்களும் எங்களுக்கு உடனே வேண்டும் என்றனர் 21 வாதைகளும் இதை கேட்ட சிவப் பெருமான் அடே! வாதைகளை இந்த வரங்களையெல்லாம் பெற்றுக்கொண்டு பூலோகத்தில் சென்று அங்கிருக்கும் மக்களுக்கு இன்னல்களை கொடுத்தால் அந்த மக்கள் உங்களை தெய்வமாக கரம் எடுத்து வணங்குவார்களா என்ன வரம் இது என்றார்.


சிவப்பெருமானே நாங்கள் வாதைகள் தான் குலைவாழை இசக்கியின் பிள்ளைகள் தான் எங்களை நம்பி வணங்கியவர்களுக்கு ஒரு நாளும் இடைஞ்சல் செய்ய மாட்டேம் எங்களை நம்பியவருக்கு நடராஜனை போல் இருந்து காப்போம். எங்களை நம்பி வணங்கும் மக்களின் குறைகளை தீர்போம் அவர்களை ராஜாவாக வாழ வைப்போம். மேலும் எங்களை நம்பாதவர்களை அழிப்போம். இது ஒரு தெய்வமா என்றும் எங்களை சாதாரணமான வாதைகள் என்றும் ஏளனமாக நினைப்பவர்களின் குடலை உறுவி கழுத்தில் மாலையாக போட்டு படையல் போடுவோம். எங்களை தெய்வமாக வணங்கும் பிள்ளைகளுக்கு கஷ்டங்களையும் துன்பத்தையும் தொந்தரவுகளையும் நீக்குவோம் எங்கள் பிள்ளைகளுக்கு தொல்லை கொடுப்பவர்களின் வம்சத்தையே அழிப்போம். எங்களை தெய்வமாக கூப்பிடும் பிள்ளைகளுக்கு என்றும் காவலாக இருப்போம் என்று சொல்லி வரம் கேட்க சிவப்பெருமான் அனைத்து வரங்களையும் தந்தேன் என வரத்தையும்  கொடுத்து தெய்வங்களான 21 வாதைகளுக்கும் அம்மைக்கும் ஆயுதங்கள் கொடுக்கிறார் வெட்டறிவாள், ஈட்டி, பந்தம், சல்லடம், தொப்பி, பெந்து தடி, இது எல்லாம் வாதைகளுக்கு கொடுத்த பிறகு குலைவாழை இசக்கி அம்மைக்கு வெள்ளி மணிபதக்கத்தை கையில் கொடுத்து ஒரு வெள்ளி பிரம்பையும் கையில் கொடுத்து அம்மா குலைவாழை இசக்கி இந்த பிரம்பை கையில் எடுத்து எதை எதை நீ நினைக்கிறாயோ அது கண்டிப்பாக நடக்கும் என்று சொல்லி ஆசி வழங்கி அனைவரையும் சிவப்பெருமான் பூலோகம் அனுப்பி வைக்கிறார்.

வரங்களை பெற்ற பின் பூலோகம் வந்த 21 வாதைகளும் பாண்டிய மன்னனையும் நம்பிமார்களையும் அழித்தனர் பின்னர் பாண்டிய நாட்டையே அழித்து மண்புழுதிக் காடாக மாற்றினார்கள். பின்பு சாந்தமடைந்த தெய்வமாகி பூசை வைத்துக் கேட்கவே அங்காங்கு இருந்த மக்கள் 21 வாதைகளையும் அம்மையையும் தெய்வமாக வணங்கினார்கள். மன்னன் ராஜா வாதை, மன்னன் கருங்காளி,  வாதை இப்படி 21 வாதைகளும் குலைவாழை இசக்கி அம்மையும் பல குடும்பங்களுக்கு குல தெய்வமாக இருந்து இன்றும் பிள்ளைகளுக்கு ஆசிவழங்கி அருள்பாலித்து வருகின்றனர்.

மேலே சொல்லபட்ட வரலாற்றுக் கதை நமது முன்னோர்களின் பழம்தமிழர் கலையான வில்லுப்பாட்டிலிருந்து பெறப்பட்டது.

வில்லுப் பாட்டு கலைஞர்களுக்கு நன்றி.

21 வாதைகளின் பெயர்கள்

By Manager

One thought on “தென்தமிழக உப தெய்வங்களான 21 வாதைகள் சிவபெருமானிடம் வேண்டிப் பெற்ற 60 வரங்கள்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *