Spread the love

காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்
போதொளிர் பூந்தாமரையும் பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடி
நீதியொளிர் செங்கோலாய் திருக்குறளைத் தாங்கு தமிழ் நீடு வாழ்க!

குண்டலம் என்பது காதில் அணியும் அணிகலன் என்பதால் குண்டலகேசி என்னும் நூல் அன்னைக்குக் காதணியாக அமைகின்றது. வளையல் என்பது கைகளில் அணியும் அணிகலன் என்பதால் வளையாபதி என்னும் நூல் அன்னைக்குக் கையணியாக அமைகின்றது. மாணிக்க பதக்கங்கள் மணி மாலைகளுடன் மார்பில் அணியப்பட வேண்டியவை என்பதால் சீவக சிந்தாமணி என்னும் நூல் அன்னையின் மார்பில் ஒளி வீசி நிற்கின்றது. மேகலை என்பது முத்துகளால் செய்யப்பட்டு இடையில் அணியப்படுவதால் மணிமேகலை இடையணியாக விளங்குகின்றது. சிலம்பு என்பது கால்களில் அணியும் அணிகலன் என்பதால் சிலப்பதிகாரம் அன்னையின் பூந்தாமரைப் பாதங்களில் ஒலி செய்து விளங்குகின்றது.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *