Spread the love

நமது கனவில் கோயிலைக் காண்பது நன்மையான பலன்களைத் தரும். நாம் செய்யும் தொழில், வியாபாரம் முன்னேறும். மேலும், நவீன ரக தொழில்களில் ஈடுபாடு உண்டாகும். மக்களுக்கு சேவை புரியும் அறச்செயல்களில் ஈடுபட்டு புகழ் பெற வழிவகை செய்யும். புனித யாத்திரைகள் மேற்கொள்ளும் சூழல் உண்டாகும்.

அதே நேரம் பாழடைந்த அல்லது தெய்வ விக்ரகம் இல்லாத கோயிலைக் கனவில் காண்பது நல்லதல்ல. அத்தகைய கனவு நீங்கள் முயற்சிக்கும் செயல்களில் தோல்வியும், பொருள் நஷ்டம் போன்ற கெட்ட பலன்களை தரும்.

நீங்கள் கோயிலில் நுழைந்து இறைவனை வழிபடுவதுபோல் கனவு கண்டால், ஈடுபடும் செயல்கள் அனைத்தும் வெற்றியாகவே முடியும்.

கனவில் கோயில் மணியோசை ஒரே சீராக ஒலிப்பது போல் உணர்ந்தால் பிள்ளையில்லா தம்பதிகளுக்கு குழந்தைச் செல்வம் உண்டாகும். பணவரவும் அதிகரிக்கும். ஆனால் கோயில் மணியோசை சீரற்றதாக ஒலிப்பது போன்று உணர்ந்தால் உங்கள் வாழ்வில் பல சிக்கல்கள் உருவாவதோடு பண விரயமும் ஏற்படும்.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *